படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, December 26, 2011

படித்ததில் பிடித்தது


நண்பர்களே கீழே தொகுக்கப்பட்டுள்ளது எனது சொந்த சரக்கல்ல. படித்தவைகளில் இருந்து பிடித்தவைகளைத் தொகுத்துள்ளேன்.

"மன உறுதியை சோதனை செய்யவே தோல்விகள் ஏற்படுகின்றன. ஆகவே இத்தகைய சோதனைகளில் நீங்கள் தோற்று விடக்கூடாது"

"உங்களின் நம்பிக்கையின் அளவிற்குத்தான் உங்களால் ஆசைப்பட முடியும். நீங்கள் ஆசைப்படும் அளவிற்குத்தான் உங்களால் அடைய முடியும்"

"வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே"



"தவறு செய்து விட்டதாக ஒப்புக் கொள்ள வெட்கப்படாதீர்கள். ஒப்புக் கொண்டால் நேற்றை விட இன்று நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்"
--அலெக்ஸாண்டர் போப்.

"வேலை, தொடர்ந்த இடைவிடாத கடினமான வேலைதான் நீடித்த பலன்களைக் கொடுக்கும். பாதி முயற்சி செய்தால் பாதிப்பலன் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். அதில் பலனே கிடையாது"
--ஹாமில்டன் ஹோல்ட்

"தனிமையில் பலசாலி வளர்கிறான். பலவீனன் தேய்கிறான்"
--கலீல் கிப்ரான்

"வேறொருவர் வந்து நமக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் நம்மை அன்புமயமாக்க முடியாது. வேறொருவர் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நமக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளுவது எப்படி என்று நாமே கற்றுக் கொள்ள வேண்டும்"


"இன்றைய நமது கடமையும் இன்றைய நாளும் மட்டுமே நமக்குச் சொந்தமானவை. பலன்கள் எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன"

"அளவுக்கு மிஞ்சிய தூக்கம், மயக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், எதையும் தாமதமாகச் செய்தல் இவை ஆறும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகளாகும்"
--விதுரநீதி

"பேசாமல் இருப்பது நல்லது. ஆயினும் அவ்வப்போது பேசுவது சிறந்தது. இரண்டு விஷயங்கள் அறிவுக்குப் பொருந்தாதது. பேச வேண்டியபோது பேசாதது. பேச வேண்டாத போது பேசுவது"
-- சாஅதி

"இன்றைய நிகழ்வுகளை அனுபவிப்போம். நாளைய நிகழ்வுகளை வடிவமைப்போம்"


2 comments:

Chandru said...

Good Collection!!!

Lingesh said...

Thank you Chandru.

Post a Comment