படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Tuesday, December 27, 2011

மலரும் நினைவுகள் - 2 (காதல்)

காதல்



சிறகடித்துப் பறக்க நினைத்து
சிந்தனை வயப்பட்டேன்...

மனம் விட்டுப் பேச நினைத்து
மயங்கி நின்றேன்...

சாதனை என்று நினைத்து
சரிந்து விழுந்தேன்...

காதலிப்பதாக நினைத்து
கவிதை மட்டும் எழுதினேன்...


மாறுதல்


தங்கைக்கோ ஆச்சரியம்
தாய்க்கோ பெருமகிழ்ச்சி
தந்தைக்கோ சந்தேகம்...
ஆம்
இப்பொழுது தினமும்
கோவிலுக்குச் செல்கிறேன்
தங்கைக்குத் துணையாக...


4 comments:

Post a Comment