படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Sunday, December 25, 2011

மலரும் நினைவுகள்

நீண்ட நாட்களாக தவணையிலிருந்த வீடு சுத்தம்செய்யும் வேலையை சென்ற வாரம் செய்ய முடிந்தது. அப்போது வீடு சுத்தமானதுடன் சில பல மலரும் நினைவுளும் கிட்டியது. கல்லூரியில் படித்த காலத்தில் கிறுக்கிய சில கவிதைத் தாள்களும் கிடைத்தன. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.... அதேதான்.... கீழே படியுங்கள்...


எண்ணங்களாக...

வாழ்க்கைப் பயணத்தில்
சில காலம் கூடிய
நினைவுகள்...

உயரப்பறந்து
வானைத் தழுவ நினைத்த
நினைவுகள்...

மெளனங்களின்
புன்னகை வார்த்தைகளால்
புதிருக்கு விடைதேடிய காலங்கள்....

மொத்தத்தில்
கல்லூரி வாழ்க்கை
கரையாத கல்வெட்டாக...

என்றென்றும்
என்னுள்ளே
எண்ணங்களாக....


உதவி

அன்பே
என் இதயத்தை
நீயே வைத்துக்கொள்...

உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு...

குறிப்பு: தங்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் அசெளகரியங்ளுக்கும் வருந்துகிறேன்...


5 comments:

முத்தரசு said...

மலரும் நினைவுகள்...ஹிம்

//உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு..//

ம்ஹீம்..

Lingesh said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி "மனசாட்சி" நண்பரே...

Anonymous said...

why this kolaveri ...kolaveri da....
but nice :)

Anonymous said...

Anonymous - Manesh

Lingesh said...

Kola veri illa machan.... it is kavithai veri.... athu oru feelings.... Thank you Manesh....

Post a Comment