படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, September 28, 2011

நாட்டு நடப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். என் அருகில் ஒரு மத்திய வயதொட்டிய தம்பதியினர். விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் அவருக்கு வந்த அழைப்பில் பேசியவர் நான் இப்போது கொல்கத்தாவில் இருக்கிறேன் என்றார். செல் பேசியல் பொய் பேசினார்.

கோவை விமான நிலையத்திற்கு வருவதற்காக அரசு பேருந்தில் (Town Bus) ஏறி பத்து ரூபாய் தந்து பணசீட்டு கேட்டேன். விமான நிலையத்திற்கு கட்டணமாக ஐந்து ரூபாய் சில்லரையாக வேண்டும் என்றார். என்னிடம் சரியாண சில்லரை இல்லையென்றும் பத்து ரூபாய் மட்டுமே உள்ளது என்றேன். விமான நிலையம் நெருங்கும் வரை சில்லரை இல்லையென்று பயணச்சீட்டை தர மறுத்துவிட்டார். ஆனால் எனக்கு முன் பயணச்சீட்டு வாங்கியவர் ஐந்து ரூபாய் தந்தார். இருந்தும் எனக்கு பயணச்சீட்டு தராமலேயே விமான நிலைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டுவிட்டார். கட்டணமும் வாங்கவில்லை. அரசு பேருந்து கழகம் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது புரிந்தது.

கடந்த இரு வாரமாக அலுவலகத்திற்குச் செல்ல காலையில் பேருந்தில் பயணிக்கின்றேன். பேருந்து கட்டணம் மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் (ரூபாய் 3.50). ஐந்து ரூபாய் தந்தால் ஒரு ரூபாய் தான் திருப்பி தருவார் ஐம்பது காசு தந்ததே இல்லை. இரண்டு நாட்கள் முன்பு ஐம்பது காசை கேட்டதற்கு என்னை மேலும் கீழூம் பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். இன்று அதே நடத்துனர், அதேபோல் ஒரு ரூபாய் தான் திருப்பி தந்தார். நான் அவரிடம் இரண்டு நாட்கள் முன்பு கூட நீங்கள் ஐம்பது காசு தரவில்லை, இன்றையதையும் சேர்த்து ஒரு ரூபாய் தாருங்கள் என்றேன். கொடுத்துவிட்டார். கேளுங்கள் தரப்படும்.
குறிப்பு: பேசாமல் அரசாங்கம் அனைத்து பேருந்து கட்டணங்களையும் முழு ரூபாய்யாக மற்றிவிடலாம், நஷ்டமாவது சிறிது குறையும்.