படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, December 28, 2011

மலரும் நினைவுகள் - 3 (மறக்கத்தான் முடியுமா)


மறக்கத்தான் முடியுமா?


மறக்கத்தான் முடியுமா?
காய்ந்த பேருந்து நிறுத்தத்தில்
நீ மட்டும் பசுமையாய்
நின்ற காலங்களை...

மறக்கத்தான் முடியுமா?
கல்லூரிக்குள் கால்வைத்த
முதல் நாள் முகவரிகளை...

மறக்கத்தான் முடியுமா?
நாம் முதன் முதலில்
பார்த்த திரைப்படத்தை...

மறக்கத்தான் முடியுமா?
நம்மை இணைத்து மற்றவர்கள்
பேசிய வார்த்தைகளை...

மறக்கத்தான் முடியுமா?
உன் திருமணத்தில்
மாப்பிளை தோழனாக
நான் நின்றதை....

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை!
உன்னையல்ல...

2 comments:

சசிகலா said...

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை
அருமை

Lingesh said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே...

Post a Comment