படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, May 23, 2012

வழக்கு எண் - என் பார்வையில்




தண்டிப்பதும் தண்டிக்கப்படுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இது கொஞ்சம் சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு சிறு ஒப்பீடு... புரிவதற்காக

நீங்கள் ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புகிறீர்கள். அதற்காக உங்கள் நாக்கை வெட்டி எறிய வேண்டும் என்ற தண்டனையை ஏற்றுக்கொள்வீர்களா.

ஒரு பரம ஏழை ஒரு மிகக்பெரிய பணக்காரன். இருவரும் ஒரே தவறைச் செய்கிறார்கள். அபராதம் என்ற தண்டனை யாருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல்லில் தெரியாமல் இடித்துக்கொள்கிறீர்கள். இரத்தம் கொட்டுகிறது. கல்லுக்கா தண்டனை தரமுடியும் இல்லை உங்கள் காலுக்கா தண்டனை தருவது.

நீங்கள் ஒருவரைக் காதலித்தீர்கள். அவரும் உங்களைக் காதலித்தார். அங்கு காதல் இருந்தது, அன்பு இருந்தது, பாசம் இருந்தது, அக்கறை இருந்தது, பாதுகாப்பு இருந்தது, ஒரு உயர்ந்த உறவு இருந்தது. பிரிந்து விட்டீர்கள். தண்டனை தருவதால் காதல், அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு திரும்ப வந்துவிடவா போகிறது.

அடக்கு முறையால் ஒழுக்கம் வராது. உங்களின் மனம் கூட பல சமயம் உங்கள் புத்தியின் சொல்படி நடப்பதில்லை.

எந்த உயிரின் மீதும் தண்டனை என்று கூறி மனதை கீரிப் பார்க்காதீர்கள். உடலை ரணப்படுத்தாதீர்கள்.

உங்களது வேலையைச் சரியாக, மிகச் சரியாக செய்யுங்கள். அதுவே போதும். உலகம் ஆனந்தமாகிவிடும்.