படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, January 4, 2012

மலரும் நினைவுகள் - 5 (காதலிக்கிறோம்)

காதலிக்கிறோம்



எனக்காக நீ
கவிதையாகவில்லை...
உனக்காக நான்
கவிஞனாகவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

கைகோர்த்துக் கொண்டு
கடற்கரை செல்லவில்லை...
கடனுக்குச் சுண்டல்
வாங்கவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...

அதனால்
காதலிக்கிறோம்...

4 comments:

சசிகலா said...

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...
நல்ல காதல்

Lingesh said...

ஆம்.... நல்ல காதல் தான்.... நன்றி சசிகலா அவர்களே...

சி.பி.செந்தில்குமார் said...

//என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...

அதனால்
காதலிக்கிறோம்.//

அப்படியுமா உங்களை காதலிக்கிறாங்க...பரந்த மனசுதான் உங்கள் காதலிக்கு

Lingesh said...

ஹ...ஹா.... நன்றி சி.பி அவர்களே....

Post a Comment