நெருப்பில் எரியும்
புது மனைவியின்
தவிப்பு....
பெற்றோரை
இழந்த
குழந்தையாய்
என் மனம்....
ஊமையின்
உணர்ச்சியை
அறியத்துடிக்கும்
குருடனின் நிலை....
ஜாதிச் சண்டையும்
கள்ள ஓட்டும்
அனுகுண்டு சோதனையும்
அரசியல் விளையாட்டும்
கார்கில் யுத்தமும்
புகைவண்டி விபத்தும்
ஒரிசா புயலும்
குஜராத் பூகம்பமும்
கலிகாலத்தின்
நிலை தான்
என்னுள்ளும்....
அன்பே
உன்னைப்
பிரிந்த போது...
குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.