படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label இழப்பு. Show all posts
Showing posts with label இழப்பு. Show all posts

Thursday, October 27, 2011

இழப்பு

மண்ணெண்ணைய்
நெருப்பில் எரியும்
புது மனைவியின்
தவிப்பு....

பெற்றோரை
இழந்த
குழந்தையாய்
என் மனம்....

ஊமையின்
உணர்ச்சியை
அறியத்துடிக்கும்
குருடனின் நிலை....

ஜாதிச் சண்டையும்
கள்ள ஓட்டும்
அனுகுண்டு சோதனையும்
அரசியல் விளையாட்டும்
கார்கில் யுத்தமும்
புகைவண்டி விபத்தும்
ஒரிசா புயலும்
குஜராத் பூகம்பமும்
கலிகாலத்தின்
நிலை தான்
என்னுள்ளும்....

அன்பே
உன்னைப்
பிரிந்த போது...

குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.

Saturday, October 22, 2011

அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்?

ஓய்வெடுக்க நினைத்த போதுதான்
தெரிந்தது நின்ற இடம்
கல்லறை என்று...
அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்
அனுபவித்தாவது வாழ்ந்திருக்கலாம்...


குறிப்பு: நீண்ட நாட்களுக்குப்பின் கவிதையெழுத ஒரு சிறு முயற்சி. உங்களின் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடவும்.