படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, May 23, 2012

வழக்கு எண் - என் பார்வையில்




தண்டிப்பதும் தண்டிக்கப்படுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இது கொஞ்சம் சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு சிறு ஒப்பீடு... புரிவதற்காக

நீங்கள் ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புகிறீர்கள். அதற்காக உங்கள் நாக்கை வெட்டி எறிய வேண்டும் என்ற தண்டனையை ஏற்றுக்கொள்வீர்களா.

ஒரு பரம ஏழை ஒரு மிகக்பெரிய பணக்காரன். இருவரும் ஒரே தவறைச் செய்கிறார்கள். அபராதம் என்ற தண்டனை யாருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல்லில் தெரியாமல் இடித்துக்கொள்கிறீர்கள். இரத்தம் கொட்டுகிறது. கல்லுக்கா தண்டனை தரமுடியும் இல்லை உங்கள் காலுக்கா தண்டனை தருவது.

நீங்கள் ஒருவரைக் காதலித்தீர்கள். அவரும் உங்களைக் காதலித்தார். அங்கு காதல் இருந்தது, அன்பு இருந்தது, பாசம் இருந்தது, அக்கறை இருந்தது, பாதுகாப்பு இருந்தது, ஒரு உயர்ந்த உறவு இருந்தது. பிரிந்து விட்டீர்கள். தண்டனை தருவதால் காதல், அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு திரும்ப வந்துவிடவா போகிறது.

அடக்கு முறையால் ஒழுக்கம் வராது. உங்களின் மனம் கூட பல சமயம் உங்கள் புத்தியின் சொல்படி நடப்பதில்லை.

எந்த உயிரின் மீதும் தண்டனை என்று கூறி மனதை கீரிப் பார்க்காதீர்கள். உடலை ரணப்படுத்தாதீர்கள்.

உங்களது வேலையைச் சரியாக, மிகச் சரியாக செய்யுங்கள். அதுவே போதும். உலகம் ஆனந்தமாகிவிடும்.

Wednesday, April 11, 2012

என் நம்பிக்கை!



மறந்து போக
இது ஒன்றும்
நினைவு அல்ல...
என் நம்பிக்கை!

சட்டென்று உடைய
இது ஒன்றும்
கண்ணாடி பொம்மையில்லை...
என் காதல்!

முடிந்து போக
இது ஒன்றும்
திரைப்படம் இல்லை...
என் வாழ்க்கை!

Sunday, January 8, 2012

படித்ததில் பிடித்தது - 2



வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருக்கவேண்டும். விரும்பியதை அடைவது; அடைந்ததை அனுபவிப்பது. பெரும் புத்திசாலிகளால் மட்டுமே இரண்டாவது குறிக்கோளை அடையமுடியும்.
--லோகம் பி. ஸ்மித்

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களில் தான் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்
--ஆர்தர் ஸ்பியர்


ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.



தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
--ஹென்றி. சி. லிங்க்.

முயற்சி செய்யும் வரை உங்களால் என்ன முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது.
--ஹென்றி ஜேம்ஸ்




தோல்வி என்பது மேலும் புத்திசாலித்தனமாக நம் வேலையைத் துவங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு.
--ஹென்றி ஃபோர்டு

தப்பு செய்யாதவர்கள் என்பவர்கள்
எதையுமே புதிதாக செய்ய முயற்சிக்காதவர்கள்.


முதலில் கீழ்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானே வரும்!
முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு.
எஜமானனாக நீ தகுதி பெறுவாய்!
--சுவாமி விவேகானந்தர்

நடக்குமோ நடக்காதோ
நோக்கம் உயர்வானதாய் இருக்கவேண்டும்



பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!

எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு!
அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக
உண்மையாக இருக்க முடியும்!
--ஓஷோ


அமைதி இல்லாதவனுக்கு இன்பம் இல்லை.
--கீதை

முழுக்க முழுக்க சர்க்கதையாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை விழுங்கிவிடும்!
முழுக்க முழுக்க எட்டிக்காயாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்!
--பாரசீகப் பழமொழி



வெற்றி என்பது முடிவல்ல.
அது ஒரு தொடர் பயணம்!