படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Wednesday, January 4, 2012

மலரும் நினைவுகள் - 5 (காதலிக்கிறோம்)

காதலிக்கிறோம்



எனக்காக நீ
கவிதையாகவில்லை...
உனக்காக நான்
கவிஞனாகவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

கைகோர்த்துக் கொண்டு
கடற்கரை செல்லவில்லை...
கடனுக்குச் சுண்டல்
வாங்கவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...

அதனால்
காதலிக்கிறோம்...

Tuesday, January 3, 2012

மலரும் நினைவுகள் - 4 (மனம்)

மனம்



பார்க்கத் துடிக்கும்!
பார்க்கவில்லை என்றால்
பைத்தியம் பிடிக்கும்...

பேசத் துடிக்கும்!
பேசவில்லை என்றால்
உறக்கம் உறங்கிவிடும்...

அர்த்தமற்ற பேச்சுக்கள்
அவசியமற்ற பார்வைகள்...

தேவையில்லா உறவுகள்
தேவைப்பட்டால் கனவுகள்...

பத்துநாள் காதலி
பத்தாம் நாள் தங்கச்சி...

அழகான முகத்தில்
அரை அங்குல தாடிகள்...

அனுபவசாலி என்று
அடுத்தவருக்கு அறிவுரை...

அழகில் இருக்கும்
அழிவை எண்ணி
கடைசியில் கண்ணீர் விடும்...


Wednesday, December 28, 2011

மலரும் நினைவுகள் - 3 (மறக்கத்தான் முடியுமா)


மறக்கத்தான் முடியுமா?


மறக்கத்தான் முடியுமா?
காய்ந்த பேருந்து நிறுத்தத்தில்
நீ மட்டும் பசுமையாய்
நின்ற காலங்களை...

மறக்கத்தான் முடியுமா?
கல்லூரிக்குள் கால்வைத்த
முதல் நாள் முகவரிகளை...

மறக்கத்தான் முடியுமா?
நாம் முதன் முதலில்
பார்த்த திரைப்படத்தை...

மறக்கத்தான் முடியுமா?
நம்மை இணைத்து மற்றவர்கள்
பேசிய வார்த்தைகளை...

மறக்கத்தான் முடியுமா?
உன் திருமணத்தில்
மாப்பிளை தோழனாக
நான் நின்றதை....

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை!
உன்னையல்ல...

Tuesday, December 27, 2011

மலரும் நினைவுகள் - 2 (காதல்)

காதல்



சிறகடித்துப் பறக்க நினைத்து
சிந்தனை வயப்பட்டேன்...

மனம் விட்டுப் பேச நினைத்து
மயங்கி நின்றேன்...

சாதனை என்று நினைத்து
சரிந்து விழுந்தேன்...

காதலிப்பதாக நினைத்து
கவிதை மட்டும் எழுதினேன்...


மாறுதல்


தங்கைக்கோ ஆச்சரியம்
தாய்க்கோ பெருமகிழ்ச்சி
தந்தைக்கோ சந்தேகம்...
ஆம்
இப்பொழுது தினமும்
கோவிலுக்குச் செல்கிறேன்
தங்கைக்குத் துணையாக...


Sunday, December 25, 2011

மலரும் நினைவுகள்

நீண்ட நாட்களாக தவணையிலிருந்த வீடு சுத்தம்செய்யும் வேலையை சென்ற வாரம் செய்ய முடிந்தது. அப்போது வீடு சுத்தமானதுடன் சில பல மலரும் நினைவுளும் கிட்டியது. கல்லூரியில் படித்த காலத்தில் கிறுக்கிய சில கவிதைத் தாள்களும் கிடைத்தன. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.... அதேதான்.... கீழே படியுங்கள்...


எண்ணங்களாக...

வாழ்க்கைப் பயணத்தில்
சில காலம் கூடிய
நினைவுகள்...

உயரப்பறந்து
வானைத் தழுவ நினைத்த
நினைவுகள்...

மெளனங்களின்
புன்னகை வார்த்தைகளால்
புதிருக்கு விடைதேடிய காலங்கள்....

மொத்தத்தில்
கல்லூரி வாழ்க்கை
கரையாத கல்வெட்டாக...

என்றென்றும்
என்னுள்ளே
எண்ணங்களாக....


உதவி

அன்பே
என் இதயத்தை
நீயே வைத்துக்கொள்...

உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு...

குறிப்பு: தங்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் அசெளகரியங்ளுக்கும் வருந்துகிறேன்...