நீண்ட நாட்களாக தவணையிலிருந்த வீடு சுத்தம்செய்யும் வேலையை சென்ற வாரம் செய்ய முடிந்தது. அப்போது வீடு சுத்தமானதுடன் சில பல மலரும் நினைவுளும் கிட்டியது. கல்லூரியில் படித்த காலத்தில் கிறுக்கிய சில கவிதைத் தாள்களும் கிடைத்தன. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.... அதேதான்.... கீழே படியுங்கள்...
எண்ணங்களாக...
வாழ்க்கைப் பயணத்தில்
சில காலம் கூடிய
நினைவுகள்...
உயரப்பறந்து
வானைத் தழுவ நினைத்த
நினைவுகள்...
மெளனங்களின்
புன்னகை வார்த்தைகளால்
புதிருக்கு விடைதேடிய காலங்கள்....
மொத்தத்தில்
கல்லூரி வாழ்க்கை
கரையாத கல்வெட்டாக...
என்றென்றும்
என்னுள்ளே
எண்ணங்களாக....
உதவி
அன்பே
என் இதயத்தை
நீயே வைத்துக்கொள்...
உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு...
குறிப்பு: தங்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் அசெளகரியங்ளுக்கும் வருந்துகிறேன்...