படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Wednesday, November 16, 2011

நாட்டு நடப்பு - 2 (ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?)

திங்கள் அன்று காலை சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தேன். பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே நிற்காமல் ஆம்னி பேருந்து நிலையத்தினுள் வந்து நின்றது. என் முன்னால் இறங்குவதற்கு நின்ற நபருக்கு அங்கிருந்து அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் பெருங்கோபம் வந்துவிட்டது. ஓட்டுநரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஓட்டுநரும் இன்று ஒருவன் சிக்கிட்டான்யா என்ற தோரனையில் அந்த நபருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். இதன் முடிவில் ஓட்டுநர் கண்டுபிடித்த விசயம் என்ன என்றால் "சட்டம் அனைவருக்கும் பொது". என்ன கொடுமை பார்தீங்களா? சட்டத்தைப்பற்றி யார் யாரெல்லாம் பேசுவது....

நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வர கோயம்பேட்டில் ஒரு பேருந்தில் ஏறினேன். அதிகாலையிலேயே அதிக மக்கள் உள்ளிருந்தனர். இரண்டு கையுடமைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு ஏறி ஒரு இருக்கையின் அருகே நின்றேன். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த யுவதி உடனடியாக என்னிடம் இருந்த மடிக்கணிணியை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரின் செயல் அந்த கூட்டத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன்னர் நின்றவர்களை நேட்டம்விட்டேன். எனக்கு மிக அருகில் நின்றவர்களில் இருவர் மடிக்கணிணி வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த யுவதி எனக்கு மட்டும் ஏன் உதவ வேண்டும்? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

அலுவலகங்களில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் (நான் அனைவரும் என்று கூறவில்லை) அலுவலகத்திற்கு வந்தவுடன் துப்பட்டாவை கழட்டி வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்குச்செல்லும் முன் அணிந்து கொள்கின்றனர். அலுவலக்தில் ஏற்ககுறைய ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்கின்றனர். ஆனால் பேருந்தில் வீட்டிற்குச் செல்லும் வழியில் அதிகபட்சம் சுமார் ஐநூறு பேரைத்தான் கடந்து செல்லவேண்டியிருக்கும். பிறகு ஏன் இப்படி என்று புரியாமல் என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் கேட்டதற்கு உமக்கு வயசாகிவிட்டது, வயதுக்கு தகுந்த ஆராய்ச்சியை மட்டும் செய்யும் என்றார். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

Wednesday, September 28, 2011

நாட்டு நடப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். என் அருகில் ஒரு மத்திய வயதொட்டிய தம்பதியினர். விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் அவருக்கு வந்த அழைப்பில் பேசியவர் நான் இப்போது கொல்கத்தாவில் இருக்கிறேன் என்றார். செல் பேசியல் பொய் பேசினார்.

கோவை விமான நிலையத்திற்கு வருவதற்காக அரசு பேருந்தில் (Town Bus) ஏறி பத்து ரூபாய் தந்து பணசீட்டு கேட்டேன். விமான நிலையத்திற்கு கட்டணமாக ஐந்து ரூபாய் சில்லரையாக வேண்டும் என்றார். என்னிடம் சரியாண சில்லரை இல்லையென்றும் பத்து ரூபாய் மட்டுமே உள்ளது என்றேன். விமான நிலையம் நெருங்கும் வரை சில்லரை இல்லையென்று பயணச்சீட்டை தர மறுத்துவிட்டார். ஆனால் எனக்கு முன் பயணச்சீட்டு வாங்கியவர் ஐந்து ரூபாய் தந்தார். இருந்தும் எனக்கு பயணச்சீட்டு தராமலேயே விமான நிலைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டுவிட்டார். கட்டணமும் வாங்கவில்லை. அரசு பேருந்து கழகம் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது புரிந்தது.

கடந்த இரு வாரமாக அலுவலகத்திற்குச் செல்ல காலையில் பேருந்தில் பயணிக்கின்றேன். பேருந்து கட்டணம் மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் (ரூபாய் 3.50). ஐந்து ரூபாய் தந்தால் ஒரு ரூபாய் தான் திருப்பி தருவார் ஐம்பது காசு தந்ததே இல்லை. இரண்டு நாட்கள் முன்பு ஐம்பது காசை கேட்டதற்கு என்னை மேலும் கீழூம் பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். இன்று அதே நடத்துனர், அதேபோல் ஒரு ரூபாய் தான் திருப்பி தந்தார். நான் அவரிடம் இரண்டு நாட்கள் முன்பு கூட நீங்கள் ஐம்பது காசு தரவில்லை, இன்றையதையும் சேர்த்து ஒரு ரூபாய் தாருங்கள் என்றேன். கொடுத்துவிட்டார். கேளுங்கள் தரப்படும்.
குறிப்பு: பேசாமல் அரசாங்கம் அனைத்து பேருந்து கட்டணங்களையும் முழு ரூபாய்யாக மற்றிவிடலாம், நஷ்டமாவது சிறிது குறையும்.