படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label இழப்பு. வாழ்க்கை. Show all posts
Showing posts with label இழப்பு. வாழ்க்கை. Show all posts

Thursday, November 3, 2011

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?



கருப்பையைத் தொலைத்து குழந்தையானேன்
குழந்தையைத் தொலைத்து சிறுவனானேன்
சிறுவனைத் தொலைத்து இளைஞனானேன்
இதயத்தைத் தொலைத்து காதலனானேன்
காதலைத் தொலைத்து கவிஞனானேன்
இளைஞனைத் தொலைத்து கணவனானேன்
காலத்தைத் தொலைத்து முதியவனானேன்
உயிரைத் தொலைத்து கல்லறையானேன்

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?